.

ஒரு விதையின் வினா


ஒரு விதையின் வினா
பறவை ஒன்று பழத்தைத் தின்று
கொட்டையை விட்டுச் சென்றது !
மண்ணில் விழுந்த நான்
மழை நீரால் துளிர்த்து வளர்ந்தேன் !
நான் வளரக் காரணமான மழை
வரக் காரணமானேன் நான் !
உனக்கு நிற்க நிழல் தந்தேன்
நீ புசிக்க நல்ல பழங்கள் தந்தேன் !
நீ சுவாசிக்கத் தூயக் காற்றுத் தந்தேன்
உந்தன் நோய் தீர்க்கும் மருந்து தந்தேன் !
பறவைகளும் வந்து அமர்ந்து
பழம் தின்று பறந்து சென்றன !
நன்றி மறந்து என்னை பணத்திற்காக
நீ விலைப் பேசி விற்று விட்டாய் !
என்னை வாங்கியவன் வருகிறான்
இரக்கமின்றி வெட்டக் கோடாரியோடு !
என்னை விற்ற உன்னிடம் ஒரு கேள்வி
என்னை விட்டுச் சென்றது ஒரு பறவை !
என்னை நட்டவன் நீ இல்லை
என்னை விற்க உனக்கேது உரிமை !
  ஹைக்கூ (சென்றியு )
  ஹைக்கூ ( சென்றியு )
  புகையிலைப் பழக்கம் ஒழிப்போம் !
  உணர்வால் மக்கள் இதயத்தில் என்றும்வாழ்பவரே சிவந்தி ஆதித்தனார் ! கவிஞர் இரா .இரவி !
  ஹைக்கூ !
  மனித விலங்குக்கு மனசாட்சி இருக்குமா ?
  நீதிநாயகம் சந்துரு வாழ்க !
  ஹைக்கூ ! ( சென்ட்ரியு )
  அய்யகோ ! அவசரப்பட்டு விட்டாய் மணி !
 

Copyrights(c) 2010, All rights reserved. Era e ravi.com | Designed by Yellowwin Media